திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை உதவி கமிஷனர் ஏ.கே.பிரீத் உத்தரவின் பேரில் நேற்று ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபாஸ்டின் மற்றும் போலீசார் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.