திருச்சி அருகே பயங்கரம்; கள்ளக்காதலியுடன் சந்திப்பை நிறுத்தாத டிரைவர் சரமாரி குத்திக்கொலை.!

திருவெறும்பூர்: திருச்சி அருகே கள்ளக்காதலியுடன் சந்திப்பை நிறுத்தாத, கார் டிரைவரை கத்தியால் குத்திக்கொலை செய்த நண்பர் போலீசில் சரணடைந்தார். திருச்சி அடுத்த திருவெறும்பூர் கக்கன் காலனியை சேர்ந்தவர் சதீஷ் (எ) சக்திகுமார்(34). வேன் டிரைவர். இவரது மனைவி விவாகரத்து பெற்று 3 ஆண்டுக்கு முன் பிரிந்து சென்று விட்டார். இவரது நண்பர், திருவெறும்பூர் காந்திநகரை சேர்ந்த முத்துப்பாண்டி (32). கார் டிரைவர். திருமணமாகாதவர்.

இவருக்கு, சதீஷ் வீட்டருகே வசிக்கும் ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் முத்துப்பாண்டி, அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து சென்றார். அந்த பெண்ணுடன் சதீசுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் முத்துபாண்டியும் அங்கு வருவதை பிடிக்காத சதீஷ், அவளுடன் தொடர்பை விட்டுவிடும்படி அவரை கண்டித்து, பெண்ணின் சகோதரர்களிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டியுள்ளார். ஆனாலும் அவர் தொடர்ந்து அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து சென்றார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு அந்த பெண்ணின் வீட்டுக்கு முத்துப்பாண்டி சென்றார். இதை தனது வீட்டு வாசலில் நின்று பார்த்த சதீஷ், அவரை அழைத்து, இங்கு வராதே என்று எச்சரித்தும் நீ கேட்கவில்லை.

அந்த பெண்ணின் அண்ணன்களிடம் சொல்லிவிட்டேன். அவர்கள் வந்துவிடுவார்கள். இனி நீ இங்கு வரமுடியாது என கூறியுள்ளார். பயத்தில் முத்துப்பாண்டி, சதீஷின் காலில் விழுந்து காப்பாற்றும்படி கெஞ்சியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.  இதில் ஆத்திரமடைந்த முத்துபாண்டி, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீசை சரமாரி குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே துடிதுடித்து இறந்தார். தொடர்ந்து முத்துபாண்டி ரத்த கறைபடிந்த கத்தியுடன் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: