செய்துங்கநல்லூர்: தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியை திருச்சி மண்டல தொல்லியல் துறை இயக்குநர் அருண்ராஜ் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர். கடந்த 8 மாதங்களாக நடந்து வரும் அகழாய்வு பணியில் 70க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தற்போது அலெக்சாண்டர் இரியா அகழாய்வு செய்த இடத்தில் 30 செமீ ஆழத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட காதணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.