ஸ்ரீபெரும்புதூர்: குணகரம்பாக்கம் கிராமத்தில் பட்டா மாற்ற ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓவை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (45). இவர், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், குணகரம்பாக்கம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சுங்குவார்சத்திரம் அருகே மகாதேவிமங்கலம் கிராமத்தை சேர்ந்த தினேசுக்கு குணகரம்பாக்கத்தில் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய, குணகரம்பாக்கம் விஏஓ உதயகுமாரிடம் சென்றுள்ளார். அப்போது, பட்டா மாற்றம் செய்ய உதயகுமார் ரூ.8 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். அதற்கு ரூ.6 ஆயிரம் தருவதாக தினேஷ் ஒப்புக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார்.