கொச்சி: கேரளாவை சேர்ந்த மீனவர்கள் 6 பேர் கடந்த 28ம் தேதி மீன்பிடிக்க படகில் சென்றனர். கொச்சியில் இருந்து வடமேற்கே 40 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டது. இதில் அவர்களது மீன்பிடி படகு கவிழ்ந்தது. 6 மீனவர்களுடம் கடலில் தத்தளித்தனர். யாராவது உதவிக்கு வரமாட்டார்களா என எதிர்பார்த்து உயிருக்கு போராடினர். இந்நிலையில் அந்த பகுதி வழியாக சென்ற ஒரு சரக்கு கப்பல், மீனவர்கள் குறித்த தகவலை கொச்சியில் உள்ள கடல்சார் மீட்பு துணை மையத்திற்கு தெரிவித்தது.