பினராயி விஜயனின் வீட்டுக்கு ரகசிய பேச்சுவார்த்தை நடத்த நான் தனியாக சென்றேன்; சொப்னா பரபரப்பு தகவல்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் சொப்னா ரகசிய வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து பினராயி விஜயன் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் கொச்சியில் சொப்னா நிருபர்களிடம் கூறியது: திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் பினராயி விஜயனின் அரசு இல்லத்திற்கு அமீரக துணைத் தூதருடனும், நான் தனியாகவும் பலமுறை சென்றுள்ளேன். இதற்கு மத்திய வெளியுறவுத்துறையின் அனுமதி கிடையாது.

அவை அனைத்தும் ரகசிய பேச்சுவார்த்தை என்பதால் இது தொடர்பாக வெளியுறவுத் துறைக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் தலைமைச் செயலகத்திற்கும் சென்று நான் பலமுறை பினராயி விஜயனை சந்தித்து பேசி உள்ளேன்.  இது தொடர்பான வீடியோக்கள் என்னிடம் உள்ளன.

இதே போல சார்ஜா மன்னர் திருவனந்தபுரம் வந்தபோதும் ஒன்றிய வெளியுறவுத் துறைக்கு தெரியாமல் நான்தான் பினராயி விஜயனின் வீட்டுக்கு அழைத்து சென்றேன். இது தொடர்பான வீடியோவும் என்னிடம் உள்ளது. இந்த விவரங்களை நான் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் தெரிவித்து உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார். சொப்னாவின் இந்த அடுத்த அதிரடி கேரள அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: