சென்னை: சென்னை விருகம்பாக்கம் பச்சையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வி (37). இவர் சாலிகிராமம் வி.வி.கோயில் ெதருவில் உள்ள அம்மா உணவகத்தில் சமையல் வேலை செய்து வருகிறார். சாலிகிராமத்தில் உள்ள அம்மா உணவகத்தின் பொறுப்பாளராக ராதிகா என்பவர் பணிபுரிந்து வருகிறார். கடந்த 28-ம்தேதி மதியம் தாமரைச்செல்வி சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பொறுப்பாளர் ராதிகா, அம்மா உணவகத்தில் பயன்படுத்தப்படும் இட்லி துணியை ஏன் சரியாக சுத்தம் செய்யவில்லை என்று தாமரைச் செல்வியிடம் கேட்டதாக தெரிகிறது.