ரிப்பன் மாளிகையின் கோபுரக் கடிகாரம் 25 நாட்களுக்கு இயங்காது: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: ரிப்பன் கட்டடக் கோபுரத்தில் உள்ள கடிகாரத்தில் பராமரிப்பு மற்றும் பழுதுகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (01072022) முதல் 25 நாட்களுக்கு கோபுரக் கடிகாரம் இயங்காது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தின் கோபுரத்தில் உள்ள கடிகாரத்தின் என சில பாகங்கள் பழுதடைந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, இந்தக் கோபுரக் கடிகாரம் தொடர்ந்து தடையின்றி செயல்பட ஏதுவாக கடிகாரத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதாலும், பழுதுகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற உள்ளதாலும், நாளை (01.072022) முதல் 25 நாட்களுக்கு ரிப்பன் கட்டடத்தின் கோபுரத்தில் உள்ள கடிகாரம் இயங்காது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: