ஈரோடு: ஈரோட்டில் பாலியல் பலாத்காரம் செய்து 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த விவகாரத்தில் ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் சிறுமியின் இரண்டாவது தந்தை சையத் அலி ஆஜர்படுத்தப்பட்டார். கோவை சிறையில் இருந்து சிறுமியின் தாய் சுமையா, புரோக்கர் மாலதி ஆகியோர் வீடியோ கான்ஃபரன்சில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி விசாரணையை அடுத்த மாதம் 14ம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டார்.