திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ளது ஆதிரப்பள்ளி. வனப்பகுதியான இங்குள்ள அருவியை பார்த்து ரசிப்பதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த நிலையில் இங்குள்ள வனப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏராளமான காட்டுப் பன்றிகள் கூட்டம் கூட்டமாக செத்து விழுந்தன. இதுகுறித்து அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.