சென்னை: பராமரிப்பு பணி காரணமாக ரிப்பன் மாளிகை கோபுரக் கடிகாரம் 25 நாட்களுக்கு இயங்காது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் மண்டல பறக்கும்படை குழுவினரால் இதுவரை 528 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. 407 மெ.டன் கட்டட கழிவுகள், மழைநீர் வடிகாலில் இணைக்கப்பட்டிருந்த 94 கழிவுகள் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.