சென்னை: ஜூலை 11ல் வானகரத்தில் மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்கவுள்ள நிலையில் ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தை 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுக்குழு நடைபெற உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் பார்வையிட்டார்.