டெல்லி: ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்குவதை நீட்டிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாதது பல்வேறு மாநிலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2017ம் ஆண்டில் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட போது மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை தவிர்க்க இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்தது. 2015-16ம் நிதியாண்டின் வருவாயை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்களில் வரி வருவாய் 14% உயர்வது உறுதி செய்யப்படும் என்றும், அதில் குறையும் தொகையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு இழப்பீடாக ஒன்றிய அரசு வழங்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.