சிவகாசி: வெம்பக்கோட்டை அகழாய்வு பணியில் முன்னோர்கள் வணிகத்திற்கு பயன்படுத்திய சுண்ணாம்பு நிரம்பிய பெரிய பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் உச்சிமேடு பகுதியில் அகழாய்வு பணிகள் கடந்த மார்ச் 16 முதல் நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் இதுவரை பல நிறங்களில் பாசி மணிகள், சுடுமண்ணால் ஆன விளையாட்டு பொருள்கள், வட்டச்சில்லுகள், அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள், விலையுயர்ந்த சூதுபவளம், சதுரங்கம் விளையாட பயன்படுத்திய சுடுமண்ணால் ஆன ஆட்டக்காய், நெசவுத் தொழிலில் இழைகளை பின்னுவதற்கு பயன்படும் சுடுமண்ணால் ஆன தக்களி, பானை, பொம்மைகள், அகல் விளக்கு, புகை பிடிப்பான் கருவி, யானை தந்தத்தால் ஆன அணிகலன், குழந்தைகள் விளையாட்டு குவளை, விலங்குகளின் எலும்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளது.