காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ரூ 1.5 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட வீட்டை, நீதிமன்ற உத்தரவால் மாநகராட்சி அதிகாரிகள் இடித்து வருகின்றனர்.காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள்கோயில் அருகே வசித்து வருபவர் அருள்ஜோதி. இவர், காஞ்சிபுரத்தில் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றார். அருள்ஜோதியின் பக்கத்து வீட்டுகாரர் குப்புசாமி. இவரது இடத்தில் அருள்ஜோதி மூன்று அடி தூரம் தள்ளி கட்டிடம் கட்டியுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால், அருள்ஜோதிக்கும் குப்புசாமிக்கும் மோதல் 2010ம் ஆண்டு உருவானது. இதன் தொடர்ச்சியாக அருள்ஜோதி வீடு கட்டுவதை நிறுத்த பக்கத்து வீட்டுகாரர் குப்புசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் 2010ம் ஆண்டு வழக்கு தொடுத்துள்ளார். தொல்லியல்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில் அருகே 300 மீட்டருக்குள் வீடு கட்ட வேண்டும் என்றால் தொல்லியல்துறை அலுவலகத்தில் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று வீடு கட்ட வேண்டும். அருள்ஜோதியின் வீடு அருகே தொல்லியல்துறை கட்டுபாட்டில் உள்ள ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோயில் உள்ளது.