செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே 500 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அடுத்த தெள்ளிமேடு பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த நபர் சாலவாக்கம் அடுத்த பேரணக்காவூர் பகுதியை சேர்ந்த முரளி (26) என்பதும், தெள்ளிமேடு பகுதியில் சீனிவாசன் என்பவரது வீட்டில் வாட்ச்மேனாக வேலை பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.