மாமல்லபுரம்: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்க உள்ளது. போட்டியில், 187 நாடுகளை சேர்ந்த 227 அணிகளில், 2,500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாட உள்ளனர். வீரர்கள், வீராங்கனைகள் தங்கும் ஓட்டல், ரிசார்ட், தங்கும் விடுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் 4 குழுக்களாக பிரித்துள்ளனர். இவர்கள், மாமல்லபுரத்தில் ஆய்வு செய்து குறைபாடுகளை கண்டுபிடித்து நிவர்த்தி செய்யவும், உணவை கையாள்பவர்கள் உணவு சமைக்கும் இடத்தை சுத்தம் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு வருகிறது. சைவ மற்றும் அசைவ உணவுகளை தனித்தனியாக வைக்கவும், சரியான தட்பவெப்ப நிலையில் வைக்கவும், உணவு கழிவுகளை முறையாக அகற்றவும், குடிநீரை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். மேலும், ஒருமுறை, பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என அறிவுரை வழங்கியும் ஆய்வு செய்கின்றனர்.