சென்னை: எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்கா ஆதரவு திரட்டுவதற்காக இன்று தமிழகம் வருகிறார். அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார். அப்போது கூட்டணி கட்சி தலைவர்களிடமும் ஆதரவு திரட்டுகிறார். ஜனாதிபதி தேர்தலில் பாஜ தலைமையிலான தே.ஜ. கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டு வேட்பு மனுவும் தாக்கல் செய்தார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்காக யஷ்வந்த் சின்கா இன்று சென்னைக்கு வருகிறார். அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.