கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் அக்ரஹாரம் மேட்டுத்தெரு பகுதியில் சித்தி விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் நிர்வாகிகள் கூட்டம் கடந்த திங்கட்கிழமை நடந்தது. கூட்டம் முடிந்ததும் ஊழியர்கள் கோயில் அறையை பூட்டிவிட்டு சென்றனர். இந்நிலையில், கோயிலில் பூஜை செய்வதற்காக நேற்று முன்தினம் பூசாரி கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்த  கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி விரைந்து வந்து பார்வையிட்டார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த கண்ணன் (29), முத்தூர் பகுதியை சேர்ந்த சல்மான் (26) ஆகியோரை கைது செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: