மாவா விற்ற பெண் கைது

சென்னை: சென்னை வியாசர்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட மாவா பொருட்களை சிலர் விற்பனை செய்வதாக எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் வியாசர்பாடி எம்ஜிஆர் நகர் 7வது தெரு பகுதியில் ஒரு வீட்டில் எம்கேபி நகர் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு சிறுசிறு பொட்டலங்களாக மாவா போதைப்பொருளை பெண் ஒருவர் விற்று வந்தார். அவரை கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில் அவர் வியாசர்பாடி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த ரேணுகா(37) என்பதும், இவர் கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து மாவா போதைப்பொருளை வாங்கி அதனை சென்னையில் விற்று வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து ரேணுகா வீட்டிலிருந்து ஒரு கிலோ மதிப்புள்ள மாவாவை போலீசார் பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: