ஈரோடு: ஈரோட்டில் கரு முட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி, தற்கொலைக்கு முயன்றதாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவர் தற்கொலை முயற்சி நாடகமாடியது அம்பலமானது. ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை போலி ஆதார் கார்டு மூலம் அவரது தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் ஆகியோர் சேர்ந்து ஈரோடு மட்டுமன்றி சேலம், ஓசூர், திருச்சி, ஆந்திரா, கேரளா ஆகிய இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனையில் சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், தாய், வளர்ப்பு தந்தை உட்பட 4 பேரை ஈரோடு தெற்கு போலீசார் கைது செய்தனர். மருத்துவமனை களில் விசாரணை நடந்தது.