திருவள்ளூர்: பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் உற்பத்தி தொழில்களுக்கு அதிகப்பட்ச கடனாக ரூ50 லட்சமும், சேவை சார்ந்த தொழில்களுக்கு அதிகப்பட்சமாக ரூ20 லட்சமும் மற்றும் வணிகம் தொடர்பான தொழில்களுக்கு அதிகப்பட்சமாக ரூ20 லட்சமும் மானியத்துடன் கூடிய தொழிற் கடன் பெறலாம். சேவை, வணிகம் தொழில் தொடர்பான திட்டத் தொகை ரூ5 லட்சத்திற்க்கு மேல் இருப்பின் அத்தகைய தொழில்களுக்கு கடனுதவி பெறுவோர்களின் கல்விதகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும், வயது வரம்பு 18 நிரம்பியவராக இருத்தல் வேண்டும். போக்குவரத்து வாகனங்கள், பண்ணை பொருட்கள் மற்றும் பண்ணை தொடர்பான தொழில்கள், பால் உற்பத்தி பொருட்கள், கோழிவளர்ப்பு, மீன்வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, தேனீவளர்ப்பு, ஆடு, மாடு வளர்ப்பு, கழுதை, மற்றும் குதிரை ஆகியவற்றிற்கு கடன் மானியம் வழங்கப்படுகிறது.