ஆவடி: கால்வாய் அருகே தடுப்புச்சுவர் இல்லாததால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். ஆவடி எம்.ஜி.ஆர் சாலையில் தினந்தோறும் பள்ளி, கல்லூரி அலுவலகம் ரயிலில் பயணம் என ஏராளமானோர் சென்று வருவது வழக்கம். இந்த சாலையின் வழியாகச் சென்றால், தேவிநகர், சின்னம்மன்நகர், குமரன்நகர், பெரியார் நகர், பருத்திப்பட்டு, காமராஜர் நகர் பகுதி மக்கள் இந்த சாலையை பெரிதும் பயன்படுத்துவார்கள். இந்த பகுதியில் ஆவடி வீட்டு வசதி வாரியம் மற்றும் கௌரிபேட்டை உள்ளது. குழந்தைகள் பெரும்பாலானோர் சாலை வழியாக பள்ளிக்கு செல்வது வழக்கம். விலிஞ்சியம்பக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் இந்த கால்வாய் மூலம் பருத்திப்பட்டு ஏரியை சென்றடையும். மழைநீர் கழிவுநீர் செல்ல, பொதுப்பணித்துறை கால்வாய் அமைத்துள்ளது.