ஏரியில் பெண் சடலம் மீட்பு

புழல்: புழல் ஏரியில் நேற்று காலை நடைபயிற்சி சென்றவர்கள் ஏரியில் சடலம் மிதப்பதாக செங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு செங்குன்றம் தீயணைப்பு துறையினருடன் சென்று சோதனையிட்டனர். அப்போது ஏரியில் பெண் சடலம் மிதந்தது தெரியவந்தது. சடலத்தை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இறந்தவருக்கு சுமார் 50 வயது இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் உடம்பில் லேசான காயமும் இருந்தது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா, தவறி விழுந்து உயிரிந்தாரா அல்லது யாரேனும் கொலை செய்து ஏரியில் வீசினரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: