திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமை வகித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா கூறியதாவது, திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், அனைவருமே எடப்பாடி கே.பழனிச்சாமி தான் ஒற்றைத் தலைமை ஏற்க வேண்டும் என விரும்புகின்றனர். தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவருமே இதை தான் வலியுறுத்துகின்றனர். மேலும், தற்போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுக வுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்பது எதார்த்தமான உண்மை. தற்போது அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பாலானோர் ஈபிஎஸ் பக்கம் தான் உள்ளனர். மேலும் வருகிற 11 ந் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையில் தலைவராக வருவது நிச்சயம் ஈபிஎஸ் தான். அதற்கு மாற்றுக் கருத்து இல்லை. அதிமுகவை வழிநடத்த வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்களின் எண்ணமாக உள்ளது.