2வது மாடியிலிருந்து தவறிவிழுந்து வடமாநில தொழிலாளி பலி

பூந்தமல்லி: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தோஷ் பிகரா (37). இவர், திருவேற்காடு மாதிராவேடு பகுதியில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் இருந்த சந்தோஷ் பிகரா, தான் தங்கியிருந்த வீட்டின் 2வது மாடியில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக 2வது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். பலத்த காயமடைந்த சந்தோஷ் பிகராவை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சந்தோஷ் பிகரா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Related Stories: