பதவி உயர்வு கேட்டு டிஎஸ்பி வழக்கு பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி டிஎஸ்பி ராமச்சந்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘1996ல் எஸ்ஐ ஆக நியமிக்கப்பட்டேன். முறையாக பதவி உயர்வு பெற்று டிஎஸ்பி ஆக உள்ளேன். கூடுதல் எஸ்பி பதவி உயர்வுக்கான பட்டியலில் இருந்த 47 பேரில் எனது பெயர் 22வது இடத்தில் இருந்தது. பதவி உயர்வுக்கான தற்காலிக பட்டியலுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், என் ெபயர் இல்லை. எனவே, டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் எஸ்பியாக பதவி உயர்வு வழங்கும் அரசாணைக்கு தடைவிதிக்க வேண்டும். எனக்கு பதவி உயர்வு வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். மனுதாரர் வக்கீல் குணசேகரன் ஆஜராகி, ‘‘மனுதாரரை விட இளையவர்கள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது’’ என்றார். மனுவை நேற்று விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுதாரரின் மனுவை விதிகளை பின்பற்றி பரிசீலிக்க வேண்டுமென உத்தரவிட்டு, மனுவை முடித்து வைத்தார்.

Related Stories: