புதுடெல்லி: ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் பதவி காலம் இன்றோடு முடிந்த நிலையில், ஒன்றிய அரசின் வேண்டுகோளை ஏற்று 3 மாதங்கள் மட்டுமே பதவியில் நீடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். நீதிமன்ற வழக்கு விவகாரத்தில் ஒன்றிய அரசு தரப்பில் ஆஜராகும் அதிகாரம் கொண்டவர் தான் தலைமை வழக்கறிஞர் ஆவார். குறிப்பாக ஜனாதிபதியின் சார்பாகவே நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைக்கும் அளவிற்கு உட்சபட்ச அதிகாரம் கொண்டது இந்த பதவியாகும். இந்த நிலையில், முன்னதாக ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த முகுல் ரோத்தகி கடந்த 2017ம் ஆண்டு தனது சொந்த காரணங்களுக்காக விலகியதை தொடர்ந்து, மூத்த வழக்கறிஞராக இருந்த கே.கே.வேணுகோபாலை அதே ஆண்டு ஜூலை 1ம் தேதி தலைமை வழக்கறிஞராக ஒன்றிய அரசு நியமித்தது.