மானாமதுரை: மழைக்காலம் துவங்கும் முன்பு மானாமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட மானாமதுரை கீழமேல்குடி கிராமங்களில் வரத்துக்கால்வாய்களை தூர்வாரவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பைபாஸ்ரோட்டில் உள்ளது மானாமதுரை கண்மாய். இந்த கண்மாய் மூலம் இருநூறுக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் சாகுபடி நடந்து வந்தது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக வரத்துக்கால்வாய்களை முறையாக தூர்வாராததால், மானாமதுரை கணமாய்க்கு தண்ணீர் செல்லும் வரத்துக்கால்வாய்களில் கருவேலமரங்கள் வளர்ந்து, கண்மாய்க்கு நீர்செல்வது குறைந்துவிட்டது.