13 வயது சிறுமியுடன் திருமணம் தொழிலாளிக்கு 27 ஆண்டு சிறை: திருப்பூர் கோர்ட் உத்தரவு

திருப்பூர்: 13 வயது சிறுமியை திருமணம் செய்த தொழிலாளிக்கு 27 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (23). பனியன் தொழிலாளி. இவர் கடந்த 2011-ம் ஆண்டு மளிகைக்கடைக்கு அடிக்கடி வந்த 13 வயது சிறுமியை வழிமறித்து ஆசை வார்த்தை கூறினார். இதனையடுத்து திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கடத்தி திருமணம் செய்து அவரை பலாத்காரம் செய்தார்.

 இதனையடுத்து சிறுமியின் தாய் அவிநாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

இது குறித்த வழக்கு திருப்பூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜன் குற்றம் சாட்டப்பட்ட பாலசுப்பிரமணிக்கு 3 பிரிவுகளின் கீழ் 27 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இதுதவிர ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

Related Stories: