திருவள்ளூர்: கலைஞரின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி சென்னை தண்டையார்பேட்டையில் நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், திருவள்ளூர் அடுத்த திருவூரில் செயல்பட்டு வரும் குத்துச்சண்டை பயிற்சி மைய மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். 32 - 36 கிலோ எடைப்பிரிவில் தர்ஷன், 60-62 கிலோ எடைப்பிரிவில் தமிழ்மாறன், 67 - 70 எடைப்பிரிவில் விக்னேஷ், 70 - 74 எடைப்பிரிவில் திருமாறன் ஆகிய 4 பேர் தங்கப்பதக்கம் பெற்றனர்.