கலைஞரின் பிறந்த நாள் விழா முன்னிட்டு மாநில குத்துச்சண்டை போட்டி; திருவள்ளூர் வீரர்கள் சாதனை

திருவள்ளூர்: கலைஞரின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி சென்னை தண்டையார்பேட்டையில்  நடைபெற்றது. இந்த போட்டியில்  பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில்,  திருவள்ளூர் அடுத்த திருவூரில் செயல்பட்டு வரும் குத்துச்சண்டை பயிற்சி மைய மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். 32 - 36 கிலோ எடைப்பிரிவில் தர்ஷன், 60-62 கிலோ எடைப்பிரிவில் தமிழ்மாறன், 67 - 70 எடைப்பிரிவில் விக்னேஷ், 70 - 74 எடைப்பிரிவில் திருமாறன் ஆகிய 4 பேர் தங்கப்பதக்கம் பெற்றனர்.

இதுபோல் 70 - 72 எடைப்பிரிவில் திவாகர் வெள்ளிப்பதக்கமும், 74 - 77 எடைப்பிரிவில் மாதேஷ் குமார், 28 - 30 எடைப்பிரிவில் கலையரசன், 26 - 28 எடைப்பிரிவில் கவியரசன், 30 - 32 எடைப்பிரிவில் ராகுல், 34 - 36 எடைப்பிரிவில் ஜஸ்வந்த் விஷ்ணு ஆகிய 5 பேர் வெண்கலப்பதக்கங்களும் பெற்றனர். சாதனைபடைத்த வீரர், வீராங்கனைகளுக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவன தலைவர் சா.அருணன், குத்துச்சண்டை பயிற்சி மையத்தின் நிர்வாகி இளவரசன் ஆகியோர்  பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: