தென்காசி, நெல்லை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காற்றின் திசை வேக மாறுபாட்டால் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

ஜூலை 1 முதல் 3 தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று ஆந்திர கடலோரப்பகுதி, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி வீச வாய்ப்பு உள்ளது. இன்று முதல் ஜூலை 1ம் தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரத்தில் பலத்த காற்று வீசும். வங்கக்கடலின் தென் மேற்கு பகுதிகளிலும் பலத்த காற்று வீசக்கூடும்.

இன்று முதல் ஜூலை 2 வரை லட்சத்தீவு, கர்நாடகா, கேரளா, தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியிலும் சூறாவளி வீச வாய்ப்பு உள்ளது.இவ்வாறு தெரிவித்துள்ளது.

Related Stories: