சென்னை: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு ஓர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், ‘ஏப்ரல் 2வது வாரத்தில் தொற்று பாதிப்பு 20 என நிலையில் இருந்தது. தற்போது ஒரு நாளைக்கு 1400 ஆக மாறி உள்ளது. தமிழகத்தில் பிஏ.5, பிஏ.2.38 வகை வைரசால்தான் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பாதிப்பு அதிகரிப்புக்கு இந்த வகை வைரஸ்தான் காரணம் என்று நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.
எனவே, சந்தைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற 26 சதவீதம் பேருக்கும், அலுவலகங்கள், பணியிடங்களிலிருந்து 18 சதவீதம் பேருக்கும், 16 சதவீதம் பேருக்கு பயணத்தின்போதும், 12 சதவீதம் பேருக்கு கல்வி நிறுவனங்களுக்குச் சென்றபோதும் தொற்று பரவியிருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.