விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே ராப்பூசலை சேர்ந்தவர் ரேகா (33). இவர் நேற்றுமுன்தினம் மாலை டூவீலரில் ராப்பூசலில் இருந்து கீரனூருக்கு சென்றார். இவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த, திருநல்லூர் சேதுராபட்டியை சேர்ந்த சின்னராஜ்(23) என்பவர் ரேகா அணிந்திருந்த 8 பவுன் செயினை பறித்துக் கொண்டு வேகமாக தப்பினார். ரேகா, சுதாரித்துக் கொண்டு கூச்சலிட்டபடி திருடனை விரட்டிக்கொண்டு டூவீலரில் சென்றார். தனது உறவினர்கள் சிலருக்கு, செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து துலுக்கம்பட்டி அருகே, சின்னராஜை மடக்கி பிடிக்க அப்பகுதியை சேர்ந்த சிலர் காத்திருந்தனர்.