இலங்கை விமானத்தில் கடத்திய ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை: இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த 37 வயது ஆண் பயணி இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் விசாவில் சென்றுவிட்டு வந்தார். இலங்கையிலிருந்து கிராம்பு, ஏலம், தேயிலை  போன்ற பொருட்களை வாங்கி வந்தார். சுங்க அதிகாரிகள் சோதனையில், அவர் உள்ளாடைக்குள் 3 பார்சல்களில் தங்கப்பசை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. அதன் எடை ஒரு கிலோ 90 கிராம் தங்கம். அதன் சர்வதேச மதிப்பு ரூ.50 லட்சம். இது பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: