ரூ.1 கோடி தங்கம் கடத்திய 13 பேர் கைது

சென்னை: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது ஹனிபா (32), என்ற பயணியையும், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து ஏர் ஏசியா விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த முகமது ஆசிக் (38) என்பவரையும் நிறுத்தி சோதனை செய்தனர். அதோடு, இலங்கையில் இருந்து சென்னை விமானத்தில் வந்த 11 பேரையும் நிறுத்தி சோதனையிட்டனர். மொத்தம் 13 பயணிகளிடம் சுங்கத்துறையினர் நடத்திய சோதனையில் அவர்களுடைய உள்ளாடைகள் மற்றும் ஆசனவாய் மற்றும் பேண்ட் பாக்கெட் போன்றவைகளில் தங்கப்பசை, தங்க செயின்கள் பெருமளவு மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களிடமிருந்து மொத்தம் 2 கிலோ 265 கிராம் தங்கத்தை கைப்பற்றினர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.1 கோடியே 4 லட்சம். இதையடுத்து சுங்கத்துறையினர் 13 பேரையும் கைது செய்து, தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories: