சிவகங்கை: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பாகனேரி கிராமத்தை சேர்ந்தவர் மார்க் ஆன்டனி (43). இவரது மனைவி கற்பகம் (40). இவர்களுக்கு ரவீந்திரன், நவீன் என்ற மகன்கள் உள்ளனர். மார்க் ஆன்டனி கர்நாடகாவில் கரிமூட்ட தொழில் செய்து வருகிறார். கற்பகம் தனது குழந்தைகளோடு சிவகங்கையில் சூரக்குளம் ரோட்டில் எம்ஜிஆர் நகரில் வசித்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன் மார்க் ஆன்டனி சிவகங்கை வந்துள்ளார். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.