மனைவி நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொன்ற கணவன்

சிவகங்கை: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பாகனேரி கிராமத்தை சேர்ந்தவர் மார்க் ஆன்டனி (43). இவரது மனைவி கற்பகம் (40). இவர்களுக்கு ரவீந்திரன், நவீன் என்ற மகன்கள் உள்ளனர். மார்க் ஆன்டனி கர்நாடகாவில் கரிமூட்ட தொழில் செய்து வருகிறார். கற்பகம் தனது குழந்தைகளோடு சிவகங்கையில் சூரக்குளம் ரோட்டில் எம்ஜிஆர் நகரில் வசித்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன் மார்க் ஆன்டனி சிவகங்கை வந்துள்ளார். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இன்று காலை வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், கட்டை மற்றும் சுத்தியலால் கற்பகத்தின் தலையில் பலமாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கற்பகம் பலியானார்.தகவலறிந்து வந்த சிவகங்கை நகர் போலீசார் கற்பகத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மார்க் ஆன்டனியை கைது செய்தனர்.

Related Stories: