காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளனர். உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று வந்த தனது கணவரை வீட்டிற்கு அழைத்து செல்ல தனது இருசக்கர வாகனத்தில பேருந்து நிலையம் நோக்கி சென்றுள்ளார். அப்போது காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் அருகே வந்த போது ஒரு சிறிய பள்ளம் இருந்தது அந்த பள்ளத்தை கடந்து சென்ற போது பக்கவாட்டில் வந்த லாரியை கவனிக்காமல் சென்றதால் அந்த லாரியில் மீது இருசக்கர வாகனம் மோதி அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.