கேரளா, கர்நாடகாவில் நில அதிர்வு பொதுமக்கள் பீதி

திருவனந்தபுரம்: காசர்கோடு மாவட்டம் கேரள மாநிலத்தின் வட எல்லையில் உள்ளது. இன்று காலை 7.45 மணியளவில் இங்குள்ள வெள்ளரிக்குண்டு மற்றும் பனத்தடி அருகே உள்ள கல்லேப்பள்ளி ஆகிய பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.

இதனால் வீடுகளில் இருந்தவர்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடினர். சில பகுதிகளில் வீடுகளில் லேசான விரிசலும் ஏற்பட்டது. இப்பகுதியில் பூமிக்குள்ளிருந்து முழக்கம் போன்ற சத்தம் கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதேபோல காசர்கோட்டை ஒட்டி கேரள எல்லையில் உள்ள கர்நாடக மாநிலம் குடகு பகுதியிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.  இது ரிக்டர் ஸ்கேலில் 3.5 ஆக பதிவாகி இருந்தது. காசர்கோட்டிலும், குடகிலும் இந்த நில அதிர்வு நான்கு வினாடிகள் வரை நீடித்தது.

Related Stories: