42 வயதில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி: 93% விழுக்காடு வாங்கிய மதுரை பெண் சிறைக்கைதி

மதுரை: மதுரையை சேர்ந்த 42 வயதான பெண் சிறைக்கைதியொருவர், பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வில் 93 விழுக்காடுடன் 600க்கு 557 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழகத்தில் நேற்று 11-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் பள்ளி மாணவர்கள் மட்டுமன்றி மதுரை மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகளும் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி இருந்தனர்.

மதுரை சிறையை சேர்ந்த 16 ஆண் சிறைக்கைதிகளும், ஒரு பெண் என 17 பேர் பதினொன்றாம் வகுப்பு எழுதியிருந்தனர். அதில் 16 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதில், குறிப்பாக 42 வயதான அமுதசெல்வி என்கிற பெண் சிறைக்கைதி 600க்கு, 557 மதிப்பெண் பெற்று 93 விழுக்காடு பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் குறிப்பாக 5 பாடங்களில் 90க்கு மேல் மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார். அதேபோல் 27 வயதான ஆண் கைதி அருண் என்பவர் 600க்கு 538 மதிப்பெண் பெற்று 90 விழுக்காடு பெற்று அசத்தியுள்ளார்.

Related Stories: