கோத்தகிரி : கரடியை பிடிக்க வைக்கப்பட்ட கூண்டு 7 மாதங்களாக கேட்பாரற்று கிடக்கிறது.கோத்தகிரி அருகே உள்ள உயிலட்டி, குனியட்டி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 7 மாதத்திற்கு முன்பு நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து கரடி அட்டகாசம் செய்தது. இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் வனத்துறையினர் கரடியை பிடிக்க உயிலட்டி பகுதியில் கூண்டு வைத்தனர். ஆனால் இதுவரை கரடி பிடிபடவில்லை. கரடி வேறு பகுதிக்குள் சென்றுஅட்டகாசம் செய்து வருகிறது.