மும்பை : மும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்திற்குள்ளானது.இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் குர்லா பகுதியில் 4 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உடனே மீட்புப் பணியை தொடங்கினர்.இதுவரை 8 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.ஒருவர் இந்த விபத்தில் பலியாகி உள்ளார்.11 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் 20 முதல் 25 பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.