வாஷிங்டன் : அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 46 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் குடிபெயர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. டெக்சாஸ் மாநிலத்தில் சான் ஆன்டோனியோ பகுதியில் ரயில் பாதைக்கு அருகே கண்டெய்னர் லாரி ஒன்றில் சடலங்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அங்கு விரைந்து வந்த போலீசார் லாரியை சோதனை செய்தனர்.