×

நெடுநல்வாடை, பரியேறும்‌ பெருமாள்‌ படங்கள்‌ வழியாக மக்களின்‌ மனங்களில்‌ தனியிடம்‌ பெற்றவர் 'பூ'ராமு : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

சென்னை : தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூ ராமு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், தனது திரையுலக நடிப்பால்‌ தமிழக மக்களின்‌ நெஞ்சங்களில்‌ இடம்‌ கொண்ட நடிகர்‌ தோழர்‌ பூ ராமு அவர்கள்‌ உடல்நலக்குறைவால்‌ மறைவெய்தினார்‌ என்ற செய்தியறிந்து மிகவும்‌ வருந்தினேன்‌. வீதி நாடகக்‌ கலைஞராக இடதுசாரி கருத்துகளை வெகுமக்களிடம்‌ கொண்டு சென்ற அவரது பணியை முற்போக்காளர்கள்‌ என்றும்‌ நினைவுகூர்வார்கள்‌.

பூ திரைப்படத்தின்‌ வழியாகத்‌ தனது நடிப்பாற்றலால்‌ திரையுலகில்‌ தடம்‌ பதித்த அவர்‌, நெடுநல்வாடை, பரியேறும்‌ பெருமாள்‌ போன்ற திரைப்படங்கள்‌ வழியாகத்‌ தனக்கென மக்களின்‌ மனங்களில்‌ தனியிடம்‌ பெற்றார்‌ என்றே சொல்ல வேண்டும்‌. தனது பயணத்தை நிறைவுசெய்துகொண்ட தோழர்‌ பூ ராமு அவர்களது பிரிவால்‌ வாடும்‌ அவரது குடும்பத்தினர்‌, திரையுலக கலைஞர்கள்‌ உள்ளிட்ட தோழர்கள்‌ அனைவருக்கும்‌ என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும்‌ ஆறுதலையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌ என்று அதில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் குணச்சித்திரக் கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவராலும் அறியப்பட்டவர் பூ ராமு.நீர்பறவை, தங்க மீன்கள், பரியேரும் பெருமாள், பேரன்பு, கர்ணன், சூரரைப் போற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்து அனைவரின் மத்தியிலும் நீங்கா இடம்பிடித்தார்.

Tags : Nedunalvada ,Pariyerum ,Perumal ,stalin , stalin , poo raamu, death
× RELATED பாரதிராஜா, பாக்யராஜ், எஸ்.ஏ...