சென்னை: பாமாக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2 ஆண்டுகளாக மழலையர் வகுப்புகள் நடத்தப்படாத நிலையில், மாணவர் சேர்க்கை அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். ஒரு வாரத்திற்குள் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்து, அடுத்த வாரம் முதல் வகுப்புகளை தொடங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.