நியூயார்க்: அமெரிக்காவில் பூங்காவில் காரில் அமர்ந்திருந்த இந்திய வம்சவாளியை சேர்ந்த நபரை மர்மகும்பல் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள குயின்ஸ் பகுதியில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த சத்னம் சிங்(31). இவர் தனது தெருவில் அமைந்துள்ள பூங்காவிற்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். தனது நண்பரின் விலையுயர்ந்த காரில் பூங்காவிற்கு சென்ற சத்னம் அங்கு காரில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது மற்றொரு காரில் வந்த மர்மநபர்கள் திடீரென சத்னம் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் அவரது தலையில் குண்டுபாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது.