பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தலையோட்டி, திமுக, அதிமுக உட்பட 9 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் 1வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு ஜூலை 9ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று திமுக சார்பில் போட்டியிடும் சேகர், பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய செயலாளர் சி.ஜெசீனிவாசன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் பி.ரவீந்திரநாத் ஆகியோர் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.