திமுக 15 வது அமைப்பு தேர்தல்: திருத்தணி எம்.பூபதி வேண்டுகோள்

திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருவள்ளூர் மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பூண்டி மேற்கு, கடம்பத்தூர் கிழக்கு, மேற்கு, திருவாலங்காடு கிழக்கு, மேற்கு, பள்ளிப்பட்டு வடக்கு, தெற்கு, திருத்தணி கிழக்கு, மேற்கு மற்றும் ஆர்.கே.பேட்டை கிழக்கு, மேற்கு ஆகிய ஒன்றியங்களின் திமுகவின் 15 வது அமைப்புத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கு இன்று (28ம் தேதி) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருத்தணி - அரக்கோணம் நெடுஞ்சாலையில் உள்ள என்.எஸ்.கே டவரில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் வழங்கப்பட உள்ளது. தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையாளர் துரை கி.சரவணனிடம் வேட்பு மனு விண்ணப்ப படிவம் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன். பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்களை உரிய கட்டணத்துடன் ஜூன் 30ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருத்தணி - அரக்கோணம் நெடுஞ்சாலையில் உள்ள என்.எஸ்.கே டவரில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் திருப்பி ஒப்படைக்கவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: