மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே நேரடி நெல் விதைப்பு தொடர்பாக விவசாய தொழிலாளர்கள், நில உரிமையாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மேல்ப்பருத்திக்குடி கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு செய்ய விவசாய தொழிலாளர்கள் எதீர்ப்பு தெரிவித்துள்ளனர். சமரசம் செய்ய வந்த காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விவசாய தொழிலாளர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் டி.எஸ்.பி தாக்கப்பட்டார்.