சென்னை : முந்தைய அரசின் சாதனைகளை பிரதமர் மோடி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம், மயூர்பன்ச் மாவட்டத்தில் உள்ள உபர்பேடா கிராமம்தான், பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு பிறந்த பழங்குடியின மலைக் கிராமம். உபர்பேடாவில் பதசாகி, துங்கிரிசாகி என்ற 2 குக்கிராமங்கள் உள்ளன. இவற்றில் பதசாகி கிராமத்தில் முழுமையாக மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. துங்கிரிசாகியில் மின்சாரம் கிடையாது. .இந்தநிலையில், பாஜ.வின் ஜனாதிபதி வேட்பாளராக முர்மு அறிவிக்கப்பட்டதும், அவருடைய வெற்றியும் உறுதியாகி இருப்பதால், துங்கிரிசாகி கிராமம் முழுவதற்கும் மின்சார வசதியை ஏற்படுத்துவதற்கான பணியை ஒடிசா அரசு போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது. இதற்கு மின்சாரத்தை எடுத்துச் செல்வதற்கான சிமென்ட் கம்பங்கள், மின்சார கேபிள்கள், டிரான்ஸ்பார்கள் மலைக்கு தூக்கி செல்லப்பட்டு உள்ளன.